கடந்த 1-ஆம் தேதி நடந்த குரூப் 4 தேர்வுக்கான முடிவுகளை மூன்று மாதங்களில் வெளியிட அரசுப் பணியாளர் தேர்வாணையம் திட்டமிட்டுள்ளது.
கிராம நிர்வாக அலுவலர் உள்பட குரூப் 4 தொகுதிக்கு உட்பட்ட 6 ஆயிரத்து 491 காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த 1-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வினை 13.60 லட்சம் பேர் எழுதினர்.
இந்த நிலையில், எழுத்து தேர்வுக்கான முடிவுகளை வரும் டிசம்பருக்குள் வெளியிட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் திட்டமிட்டுள்ளது.
ஏற்கெனவே, தேர்வுக்கால அட்டவணைப் பட்டியலில் குரூப் 4 தேர்வுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தேர்வுக் கால அட்டவணைப் பட்டியல் அண்மையில் தேர்வாணைய அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டுள்ளது. அதில், திட்டமிட்டபடி குரூப் 4 எழுத்துத் தேர்வுக்கான முடிவுகளை டிசம்பரில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.