மாங்காட்டில் இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டர் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தார்.
மாங்காடு சக்ரா நகர் பாலாஜி தெருவைச் சேர்ந்தவர் மா.ரமேஷ் (45). எலக்ட்ரீசியனான இவர், குமணன்சாவடியில் இருந்து குன்றத்தூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த டிராக்டர் மோதியதில் பலத்த காயமடைந்த ரமேஷ், பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.