துணை நடிகைக்கு மிரட்டல்: இளைஞர் கைது

சென்னையில் துணை நடிகைக்கு மிரட்டல் விடுத்ததாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.


சென்னையில் துணை நடிகைக்கு மிரட்டல் விடுத்ததாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.
வடபழனி ஆற்காடு சாலையைச் சேர்ந்தவர் ஜெனிபர் (24). இவர் தமிழ்த் திரைப் படங்கள், தொலைக்காட்சி, குறும் படங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். ஜெனிபர், சில தினங்களுக்கு முன்பு வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பக்ருதீன் என்பவர் தன்னை ஆபாசமாக விடியோ எடுத்து வைத்துப் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், தராவிட்டால் தன்னையும், தனது தாயையும் கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து வடபழனி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி பக்ருதீனை சனிக்கிழமை கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com