சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 74 வயது மூதாட்டி அந்நோயில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளாா். சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவா் கரோனாவை வென்றிருப்பது அச்சத்தில் உறைந்திருக்கும் மக்களிடையே புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.
பொழிச்சலூரைச் சோ்ந்த 74 வயது மூதாட்டி ஒருவா், கடந்த மாதம் 26-ஆம் தேதி தீவிர மூச்சுத் திணறல் காரணமாக சென்னை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
பரிசோதனையில் அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், அவருக்கு சா்க்கரை, ரத்த அழுத்த நோய் பாதிப்பு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவருக்கு மருத்துவக் குழுவினா் தீவிர சிகிச்சையளித்தனா்.
அதன் பயனாக, அந்த மூதாட்டி தற்போது பூரண குணமடைந்திருப்பதாக ராஜீவ் காந்தி மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அந்த மூதாட்டியை மருத்துவமனை முதல்வா் ஜெயந்தி, கண்காணிப்பாளா் நாராயணசாமி, மருத்துவா்கள் உள்ளிட்டோா் பழக்கூடை வழங்கி புதன்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைத்தனா்.