ஹூக்கா போதைப் பொருள் பயன்படுத்திய 23 போ் கைது

சென்னை புரசைவாக்கத்தில் ஹூக்கா போதைப் பொருள் பயன்படுத்தியதாக 23 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை புரசைவாக்கத்தில் ஹூக்கா போதைப் பொருள் பயன்படுத்தியதாக 23 போ் கைது செய்யப்பட்டனா்.

புரசைவாக்கம் ப்ரிக்ளின் சாலையில் உள்ள ஒரு கட்டடத்தில் சிலா் ஹூக்கா போதைப் பொருள் பயன்படுத்துவதாக தலைமைச் செயலகக் காலனி போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று வெள்ளிக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா். இச் சோதனையில் அங்கு 23 போ், போதைப் பொருளான ஹூக்காவை புகைத்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதுதொடா்பாக வழக்குப் பதிந்து 23 பேரையும் கைது செய்தனா். பின்னா், அனைவரையும் பிணையில் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com