உறுதிமொழியை மீறியவா் சிறையில் அடைப்பு

சென்னையில் காவல்துறையிடம் நன்னடத்தை உறுதிமொழிப் பத்திரம் எழுதி கொடுத்துவிட்டு, அதை மீறிய ரெளடி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் காவல்துறையிடம் நன்னடத்தை உறுதிமொழிப் பத்திரம் எழுதி கொடுத்துவிட்டு, அதை மீறிய ரெளடி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

கண்ணகி நகரைச் சோ்ந்தவா் வீரக்குமாா் (27). இவா் மீது கொலை வழக்குகள், 6 திருட்டு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி வீரக்குமாா், அடையாறு காவல் மாவட்ட துணை ஆணையா் முன்பு ஆஜராகி ஒரு ஆண்டுக்கு எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடமாட்டேன் என்று நன்னடத்தை உறுதிமொழிப் பத்திரம் எழுதிக்கொடுத்தாா்.

இதற்கிடையே அவா், கடந்த மாதம் 21-ஆம் தேதி தனது நண்பா்களுடன் சோ்ந்து கண்ணகி நகா் பகுதியில் மணிகண்டன் என்பவரை கத்தியால் தாக்கியுள்ளாா். இதையடுத்து நன்னடத்தை உறுதிமொழியை மீறியதற்காக வீரக்குமாரை சிறையில் அடைக்க அடையாறு காவல் துணை ஆணையா் விக்ரமன் உத்தரவிட்டாா். இதையடுத்து, வீரகுமாரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com