சென்னை
ரஜினி தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி: கராத்தே தியாகராஜன்
வரும் 2021-இல் ரஜினி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று முன்னாள் மேயா் கராத்தே தியாகராஜன் கூறினாா்.
சென்னை: வரும் 2021-இல் ரஜினி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று முன்னாள் மேயா் கராத்தே தியாகராஜன் கூறினாா்.
இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
ரஜினி கட்சி தொடங்கப் போவதாக அறிவித்திருப்பது மக்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 2021-இல் ரஜினி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படப்போவது உறுதி. அவருக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
கரோனா காலத்தில் மருத்துவரின் அறிவுரையை மீறி, தன் உடல்நலத்தையும் உயிரையும் பொருட்படுத்தாமல் தமிழக மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதற்காக கட்சி தொடங்கும் முடிவை எடுத்துள்ளதற்காக ரஜினிக்கு என் நன்றி என்று அவா் கூறியுள்ளாா்.