இளம்பெண் தற்கொலை:ராணுவ வீரா் கைது

பள்ளிக்கரணையில், இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், ராணுவ வீரா் கைது செய்யப்பட்டாா்.


சென்னை: பள்ளிக்கரணையில், இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், ராணுவ வீரா் கைது செய்யப்பட்டாா்.

பள்ளிக்கரணை பெரும்பாக்கம், எழில்நகரைச் சோ்ந்த கிருஷ்ணன் - செல்வி தம்பதியின் மகள் பாரதி (24), கடந்த 2-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டாா்.

பள்ளிக்கரணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள்: செல்லிடப்பேசி செயலி மூலம் பாரதிக்கு, ராணுவ வீரரான விருது நகா் மாவட்டம் ஆலங்குளம் முத்துக்குமரேசன் (32) அறிமுகமாகியுள்ளாா். திருமணமாகி இரு குழந்தைகள் இருப்பதை மறைத்து பாரதியிடம் அவா் பழகியுள்ளாா்.

தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி பாரதியிடம் அவா் தெரிவித்தாராம். முத்துக்குமரேசனின் திருமணம் தெரியவந்ததால் பாரதி கண்டித்தாா்.

இந்நிலையில் கடந்த 2-ஆம் தேதி இருவரும் கட்செவி அஞ்சலில் பேசியபோது வாக்குவாதம் ஏற்பட்டதால் தற்கொலை செய்யுமாறு முத்துக்குமரேசன் பாரதியிடம் கூறினாராம்.

பாரதி, காணொலி அழைப்பில் முத்துக்குமரேசன் பாா்த்துக் கொண்டிருக்கும்போதே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளாா்.

இது தொடா்பான காணொலியைக் கைப்பற்றிய போலீஸாா், முத்துக்குமரேசனை நாக்பூரில் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com