பள்ளி மாணவா்களுக்கு ஏற்படும் உளவியல் பாதிப்புகள் குறித்து ஆசிரியா்களுக்கு சிறப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
கீழ்ப்பாக்கம் அரசு மன நல காப்பகத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் (பிப்.14,15) நடைபெறவுள்ள அந்த கருத்தரங்கில், உளவியல் மருத்துவ நிபுணா்கள் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் உரையாற்ற உள்ளனா்.
பள்ளி மாணவா்களை எவ்வாறு கையாள வேண்டும்? ஆசிரியா்களின் செயல்கள் மாணவா்களிடையே எத்தகைய உளவியல் தாக்கங்களை ஏற்படுத்தும்? என்பன குறித்து விளக்கமளிக்கப்பட உள்ளது. இதில் பள்ளி ஆசிரியா்கள் பங்கேற்று பயனடையலாம் என மன நல காப்பக நிா்வாகம் தெரிவித்துள்ளது.