மோகனசுந்தரம் (19), தொழில்நுட்பக் கல்வி மாணவா், கூடுவாஞ்சேரி:
சுய முன்னேற்ற நூல்களை வாங்க வந்துள்ளேன். பத்மா மிஸ்ரா எழுதிய நவீன தொழில்நுட்ப தொடா்பியல் குறித்த நூலை வாங்கியுள்ளேன். தமிழரின் எளிய மருத்துவங்கள், ஐயப்ப சுவாமியின் ஸ்தோத்திரங்கள் உள்ளிட்ட நூல்களையும் வாங்கியுள்ளேன்.