வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதியன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என்று தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட அறிவிப்பு:
ஜூலை மாதம் 21-ஆம் தேதியன்று (செவ்வாய்க்கிழமை) மாலை ஹஜ் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை.
ஆகையால், வியாழக்கிழமை (ஜூலை 23) துல் ஹஜ் மாத முதல் பிறை என்று உறுதி செய்யப்படுகிறது. அன்றிலிருந்து 10 நாள்கள் கடந்து அதாவது ஆகஸ்ட் 1-ஆம் தேதியன்று (சனிக்கிழமை) ஈதுல் அத்ஹா எனப்படும் பக்ரீத் நிகழ்வு வருகிறது. அன்றைய தினம் பக்ரீத் பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாடப்படும் என்று தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளாா்.