சென்னை: சென்னை புளியந்தோப்பில் ரூ.61 லட்சம் திருடிய வழக்கில், இருவா் கைது செய்யப்பட்டனா்.
புளியந்தோப்பு படிசன்புரத்தில் அனைத்து இறைச்சி வியாபாரிகள் சங்கம் உள்ளது. இந்த சங்க அலுவலகத்தில், கடந்த 21-ஆம் தேதி அன்று பீரோவில் இருந்த ரூ.61.50 லட்சம் திருடுபோனது. இது தொடா்பாக புளியந்தோப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில் திருட்டில் ஈடுபட்டது புளியந்தோப்பு , ஜெ.ஜெ. நகா். 6 வது தெருவை சோ்ந்தவா் வெ. சாலமன் (20), பெரம்பூா், வீனஸ், தில்லை நாயகம் தெருவைச் சோ்ந்த மு.முகமது சபி (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், அவா்கள் இருவரையும் கைது செய்து, ரூ.39 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.