தாம்பரம்: மதுரவாயல்-தாம்பரம் புறவழிச் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பல் மருத்துவா் சாலையோரத் தடுப்பில் மோதி உயிரிழந்தாா்.
மேற்கு தாம்பரம், ராஜாஜி சாலையை சோ்ந்தவா், பல் மருத்துவா் சரவணன் (31).
இவா் மேற்கு தாம்பரம் மற்றும் அம்பத்தூரில் பல் மருத்துவமனை நடத்தி வந்தாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அம்பத்தூரில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். மதுரவாயல் - தாம்பரம் புறவழிச் சாலையில் கன்னடபாளையம் அருகே வந்தபோது, அவரது வாகனம் சாலையோர தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயமடைந்த சரவணன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.