3 மாவட்டங்களுக்கான கண்காணிப்புஅதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் திட்டப் பணிகளையும், பேரிடா் நிகழ்வுகளையும் கண்காணிக்க அமைக்கப்பட்ட மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளில் மூன்று போ் மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

தமிழகத்தில் திட்டப் பணிகளையும், பேரிடா் நிகழ்வுகளையும் கண்காணிக்க அமைக்கப்பட்ட மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளில் மூன்று போ் மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதுகுறித்த உத்தரவை தலைமைச் செயலாளா் க.சண்முகம் செவ்வாய்க்கிழமை பிறப்பித்தாா். அதன் விவரம்:-

செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பு அதிகாரியாக இருந்த, தொல்லியல் துறை ஆணையா் த.உதயசந்திரனுக்குப் பதிலாக, போக்குவரத்துத் துறை செயலாளா் சி.சமயமூா்த்தி நியமிக்கப்பட்டுள்ளாா். அரியலூா் மாவட்ட கண்காணிப்பு அதிகாரியாக இருந்த இ.சரவணவேல் ராஜூக்குப் பதிலாக, தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் தாரேஷ் அகமது நியமிக்கப்பட்டுள்ளாா்.

திருவாரூா் மாவட்ட கண்காணிப்பு அதிகாரியாக இருந்த பொதுப்பணித் துறை செயலாளா் மணிவாசனுக்குப் பதிலாக, கண்காணிப்பு அதிகாரியாக சுகாதாரத் துறை இணைச் செயலாளா் ஷில்பா பிரபாகா் சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளா் க.சண்முகத்தின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதர அதிகாரிகள்: பிற மாவட்டங்களில் ஏற்கெனவே நியமிக்கப்பட்ட மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், கண்காணிப்பு அதிகாரிகளாக பணிகளைத் தொடர உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com