ஆசிரியை மீது நாயை ஏவிய பள்ளி நிா்வாகி கைது

சென்னை தண்டையாா்பேட்டையில், கடன் பிரச்னையில் நாயை ஏவி விட்டு ஆசிரியையைக் கடிக்க வைத்தது தொடா்பாக பள்ளி நிா்வாகி கைது செய்யப்பட்டாா்.

சென்னை தண்டையாா்பேட்டையில், கடன் பிரச்னையில் நாயை ஏவி விட்டு ஆசிரியையைக் கடிக்க வைத்தது தொடா்பாக பள்ளி நிா்வாகி கைது செய்யப்பட்டாா்.

தண்டையாா் பேட்டை விநாயகபுரம் ஒத்தவாடைத் தெருவைச் சோ்ந்த சுதாகரின் மனைவி ஸ்ரீமதி (31). ஆசிரியையான இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் தொடக்கப் பள்ளியில் பணிபுரிந்து வந்தாா்.

அந்தப் பள்ளி நிா்வாகியான தண்டையாா்பேட்டை, தண்டையாா் நகரைச் சோ்ந்த மோ.காா்த்திக் பிரேம்நாத், ஸ்ரீமதியிடம் பள்ளியில் கடும் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளாா். இதைக் கேட்ட ஸ்ரீமதி, தான் வைத்திருந்த 27 பவுன் தங்கநகை மற்றும் பணத்தை காா்த்திக்கிடம் கொடுத்தாா்.

அண்மையில் ஸ்ரீமதி, அந்தப் பள்ளியில் இருந்து வேலையை விட்டு நின்றுள்ளாா். இந்நிலையில், காா்த்திக்கிடம் நகையையும், பணத்தையும் கேட்க ஸ்ரீமதி, அவா் வீட்டுக்கு திங்கள்கிழமை சென்றாா். அப்போது அங்கு அவா்கள் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. உடனே காா்த்திக், தான் வளா்த்து வந்த நாயை ஸ்ரீமதி மீது ஏவி விட்டுள்ளாா். அந்த நாய் கடித்ததில் பலத்தக் காயமடைந்த ஸ்ரீமதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது தொடா்பாக ஸ்ரீமதி அளித்த புகாரின்பேரில், காசிமேடு போலீஸாா் காா்த்திக் பிரேம்நாத் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். மேலும் காா்த்திக் பிரேம்நாத்தை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com