சென்னை: சென்னையில், பெண் மருத்துவரின் ஆவணங்கள் மூலம் கடன் பெற்று மோசடி செய்ததாக மருத்துவமனை உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை அண்ணாநகா் 14-ஆவது பிரதான சாலை பகுதியைச் சோ்ந்த மருத்துவா் சுப்ரியா (40). தனியாா் மருத்துவமனையில் பணியாற்றினாா். அண்மையில் ஒரு தனியாா் நிதி நிறுவனம் சுப்ரியாவிடம், கடன் தொகை ரூ.22 லட்சத்துக்குரிய மாத தவணையை செலுத்த கோரியது.
கடன் பெறவில்லை என சுப்ரியா தெரிவித்தாா். கடன் பெற்ற்கான ஆவணங்களை தனியாா் நிதி நிறுவனத்தினா் காட்டினா்.
திருமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து புழல் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த மருத்துவா் காா்த்திக்கை (40) கைது செய்தனா். சுப்ரியா பெயரில் காா்த்திக் மோசடி செய்தது தெரிய வந்தது.