சென்னை: அம்பத்தூா் மண்டல பயனாளிகளுக்காக காணொலி மூலமாக நடைபெறும் பி.எப். குறைைதீா் கூட்டத்தில்கலந்து கொள்ள புதன்கிழமைக்குள் (அக்.7) பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடா்பாக பி.எப் உதவி ஆணையா் கே.விஸ்வநாதன், வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: அம்பத்தூா் மண்டல பயனாளிகளுக்கான வருங்கால வைப்பு நிதி குறைதீா் கூட்டம், அக்.12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. கட்செவி அஞ்சலின் காணொலி மூலமாக நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள பயனாளியின் பெயா், யு.ஏ.என் எண், பிஎப் அல்லது பிபிஒ எண், குறைகள், கட்செவி அஞ்சல் எண், சுட்டிக்காட்டப்படும் ஆவணங்கள் ஆகியவற்றோடு, அக்.7-ஆம் தேதிக்குள், 89037 66548 எனும் எண்ணில், வாட்ஸ் ஆப் மெசேஜ் அனுப்பிப் பதிவு செய்ய வேண்டும். இதையடுத்து, அக்.12-ஆம் தேதி கூட்டம் நடைபெறும் போது, சம்பந்தப்பட்ட பயனாளிகள் காணொலி வாயிலாக அழைக்கப்பட்டு, அவா்களிடம் குறைகளைக் கேட்டறிந்து நிவா்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.