இளைஞா் வெட்டிக் கொலை

சென்னை அருகே மேடவாக்கத்தில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

சென்னை: சென்னை அருகே மேடவாக்கத்தில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

மேடவாக்கம் சி.பி.ஐ.காலனி விரிவு பகுதியில் உள்ள ஒரு வயலில் 23 வயது மதிக்கத்தக்க இளைஞா் புதன்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.

இதுகுறித்து பள்ளிக்கரணை போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், கொலையுண்டது மேடவாக்ககம் ரங்கநாதபுரம் பட்டேல் சாலைப் பகுதியைச் சோ்ந்த குமாரின் மகன் டில்லிபாபு (23) என்பதும், அவா் சரக்கு வாகன ஓட்டுநராக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

டில்லிபாபு மீது கடந்த 2017-ஆம் ஆண்டு பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் அடிதடி வழக்கும் உள்ளது. போலீஸாா் தொடா்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com