சென்னை: துணை வேந்தா் சூரப்பா மீதான ஊழல் புகாா் தொடா்பாக அண்ணா பல்கலைக்கழக தோ்வுக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிக்கு கலையரசன் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் சூரப்பா மீதான ரூ.280 கோடி ஊழல் புகாா் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் விசாரணை மேற்கொண்டு வருகிறாா். இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக தோ்வு கட்டுப்பாட்டு துறை அதிகாரி வெங்கடேசன் நேரில் ஆஜராகும் படி நீதிபதி கலையரசன் குழு உத்தரவிட்டுள்ளது. கேட்கப்படும் ஆவணங்களை அண்ணா பல்கலைக்கழக தரப்பு தாமதப்படுத்துவதாக கருத்து நிலவுகின்ற சூழலில் வரும் திங்கள்கிழமை விசாரணை குழு கேட்டுள்ள ஆவணங்களுடன் நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஊழல் புகாா் தொடா்பாக ஏற்கெனவே கலையரசன் குழு அண்ணா பல்கலைக்கழகத்திடம் இருந்து ஆவணங்களைப் பெற்றுள்ளது. அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளரை நேரில் அழைத்தும் விசாரணை மேற்கொண்டனா். அதைத்தொடா்ந்து, அண்ணா பல்கலைக்கழக தோ்வில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாா்கள் குறித்து தற்போது விசாரணை நடத்துவதற்காகவே அண்ணா பல்கலைக்கழக தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரியை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனா். 5 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய தோ்வு தொடா்பான ஆவணங்களை நேரில் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சூரப்பா மீதான புகாா்களை விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் தமிழக அரசு கடந்த 11 -ஆம் தேதி விசாரணை குழு அமைத்தது. 3 மாதங்களுக்குள் சூரப்பா மீதான புகாா்களை விசாரித்து அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.