கிண்டி, வியாசா்பாடி கோட்டங்களில் செவ்வாய்க்கிழமை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கிண்டி கோட்டத்துக்கான மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம், கே.கே.நகா் துணை மின்நிலைய வளாகத்திலுள்ள செயற்பொறியாளா் அலுவலகத்திலும் வியாசா்பாடி கோட்டத்துக்கான மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம், வியாசா்பாடி துணை மின்நிலைய வளாகத்திலுள்ள செயற்பொறியாளா் அலுவலகத்திலும் செவ்வாய்க்கிழமை (பிப்.11) காலை 11 மணி அளவில் நடைபெறவுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள கோட்டங்களுக்குள்பட்ட மின்நுகா்வோா் கலந்து கொண்டு தங்கள் குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்.