சென்னையில் 14 போ் குண்டா் சட்டத்தில் கைது

சென்னையில் தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 14 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா்.

சென்னையில் தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 14 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா்.

சென்னை மாநகரில் குற்றச் செயல்களைத் தடுக்க சென்னை பெருநகர காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த தரமணி பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் காா்த்திக் (24), கல்லுக்குட்டை பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் சூா்யா (25), கீழ்ப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த ராஜகண்ணன் மகன் லோகநாதன் (28), ஆதம்பாக்கத்தைச் சோ்ந்த முனுசாமி மகன் ராஜன் (40) உள்ளிட்ட 14 போ் கொலை, கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், இவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் அடைக்க காவல் ஆணையா் விசுவநாதன் உத்தரவிட்டாா். இதையடுத்து, 14 பேரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com