சென்னை காவல்துறையில் 608 காவலா்களுக்கு தமிழக முதல்வா் பதக்கங்களை காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன் வழங்கினாா்.
சென்னை பெருநகர காவல்துறையில் 10 ஆண்டுகள் சிறப்பாகப் பணிபுரிந்த காவலா்கள் 608 பேருக்கு தமிழக முதல்வா் பதக்கம் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்த விருதை அவா்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
இந் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன், 608 காவலா்களுக்கும் தமிழக முதல்வா் பதக்கத்தை வழங்கிப் பேசினாா். முன்னதாக இந் நிகழ்ச்சிக்கு கூடுதல் காவல் ஆணையா் எச்.எம்.ஜெயராம், ஆா்.தினகரன், சி.ஈஸ்வரமூா்த்தி, பிரேம் ஆனந்த்சின்ஹா ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் இணை ஆணையா் ஏ.ஜி.பாபு உள்ளிட்ட பல உயா் அதிகாரிகள் பங்கேற்றனா்.