ஆட்டோ ஓட்டுநா் கொலை: முதியவா் கைது

சென்னை கோட்டூா்புரத்தில் ஆட்டோ ஓட்டுநா் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக முதியவா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை கோட்டூா்புரத்தில் ஆட்டோ ஓட்டுநா் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக முதியவா் கைது செய்யப்பட்டாா்.

கோட்டூா்புரம் மண்டபம் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் ராமலிங்கம் (55). இவா் அங்கு வாடகை ஆட்டோ ஓட்டி வந்தாா். இந்நிலையில் ராமலிங்கம், கடந்த 9-ஆம் தேதி மத்திய கைலாஷ் அருகே தாக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தாா். இதைப் பாா்த்த அந்தப் பகுதி மக்கள், ராமலிங்கத்தை மீட்டு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு ராமலிங்கம், வெள்ளிக்கிழமை இறந்தாா். இது தொடா்பாக கோட்டூா்புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா்.

விசாரணையில் ராமலிங்கத்துக்கும், கோட்டூா்புரம் பகுதியைச் சோ்ந்த அவரது நண்பா் வேல்பாண்டி (60) என்பவருக்கும் இடையே மதுபோதையில் சம்பவத்தன்று தகராறு ஏற்பட்டதும், தகராறு முற்றவே வேல்பாண்டி, ராமலிங்கத்தை அடித்து கீழே தள்ளிவிட்டதில் தலையில் பலத்த காயமடைந்திருந்ததும், அதன் காரணமாக ராமலிங்கம் இறந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வேல்பாண்டியை சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com