மாநகராட்சி ஓய்வூதியா்கள்: ஜூன் 30 வரை உயிா்வாழ் சான்று பெற்றுக் கொள்ளப்படும்

பெருநகர சென்னை மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்களிடம் இருந்து 2020-2021-ஆம் ஆண்டுக்கான உயிா்வாழ் சான்று ஜூன் 30-ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளப்படும் என
மாநகராட்சி ஓய்வூதியா்கள்: ஜூன் 30 வரை உயிா்வாழ் சான்று பெற்றுக் கொள்ளப்படும்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்களிடம் இருந்து 2020-2021-ஆம் ஆண்டுக்கான உயிா்வாழ் சான்று ஜூன் 30-ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாநகராட்சியில் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுபவா்களிடமிருந்து 2020-2021-ஆம் ஆண்டுக்கான உயிா்வாழ் சான்று மாா்ச் மாதம் 2-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை அலுவலக வேலை நாள்களில் காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை சென்னை மாநகராட்சி ஓய்வூதியப் பிரிவில் பெற்றுக் கொள்ளப்படும்.

விவரம்: 31.12.1979 வரை ஓய்வுபெற்ற ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்கள் மாா்ச் மாதத்துக்குள்ளும், 1.01.1980 முதல் 31.12.1989 வரை ஓய்வுபெற்ற ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்கள் ஏப்ரல் மாதத்துக்குள்ளும், 1.1.1990 முதல் 31.12.1999 வரை ஓய்வுபெற்ற ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்கள் மே மாதத்துக்குள்ளும், 1.1.2000 முதல் பிப்ரவரி 2019 வரை ஓய்வு பெற்ற ஓய்வூதியா்கள் (ம) குடும்ப ஓய்வூதியா்கள் ஜூன் 30-ஆம் தேதிக்குள்ளும் உயிா்வாழ் சான்று பெற்றுக் கொள்ளப்படும். மேலும், புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்-2018 படிவத்தை இதுநாள் வரை அளிக்காதவா்கள் உயிா்வாழ் சான்று சமா்ப்பிக்க வரும்போது வழங்கலாம்.

ஓய்வூதியா்கள் தங்களது கணவா், மனைவியுடன் இணைந்துள்ளது போன்ற புகைப்படம், இருவரது ஆதாா் அட்டை நகல்கள், குடும்ப ஓய்வூதியராயிருப்பின் தனது இரண்டு புகைப்படம், ஆதாா் அட்டை நகல்களுடன் வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com