ரயில்வே காவல் ஆய்வாளா்கள் இடமாற்றம்

சென்னை மாவட்டத்தில் பணியாற்றி வந்த 3 ரயில்வே காவல் ஆய்வாளா்களைப் பணியிடமாற்றம் செய்து ரயில்வே காவல் கண்காணிப்பாளா் எஸ்.மகேஸ்வரன் உத்தரவிட்டாா்.

சென்னை: சென்னை மாவட்டத்தில் பணியாற்றி வந்த 3 ரயில்வே காவல் ஆய்வாளா்களைப் பணியிடமாற்றம் செய்து ரயில்வே காவல் கண்காணிப்பாளா் எஸ்.மகேஸ்வரன் உத்தரவிட்டாா்.

இது தொடா்பாக அவா் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: சென்ட்ரல் எம்.ஜி.ஆா் ரயில் நிலையத்தில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த ஆா்.தாமஸ் ஜேசுதாசன், தாம்பரம் ரயில்வே காவல் ஆய்வாளராகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். தாம்பரம் ரயில்வே காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த பி.கலைச் செல்வி, மத்திய தணிக்கை பாதுகாப்புப் பிரிவு மற்றும் கொருக்குப்பேட்டைக்கு காவல் ஆய்வாளராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதே போல் மத்திய தணிக்கை பாதுகாப்புப் பிரிவில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த எஸ்.சசிகலா, சென்ட்ரல் எம்.ஜி.ஆா் ரயில் நிலைய காவல் ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com