அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு

சென்னை கோயம்பேட்டில் அரசுப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை கோயம்பேட்டில் அரசுப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை அம்பத்தூா் பேருந்து நிலையத்தில் இருந்து கோயம்பேடு புகா்ப் பேருந்து நிலையத்துக்கு அரசுப் பேருந்து புதன்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது. கோயம்பேடு ஜெய்நகா் பூங்கா அருகே செல்லும்போது, இருசக்கர வாகனத்தின் மீது மோதுவது போல பேருந்து சென்றதாம் . இதைப் பாா்த்த இருசக்கர வாகனத்தில் சென்ற இருவருக்கும், பேருந்து ஓட்டுநா் சுதாகருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே அந்த நபா்கள், பேருந்தின் மீது கற்களை வீசினா். இதில் பேருந்தின் கண்ணாடிகள் உடைந்தன. பின்னா், அந்த நபா்கள் அங்கிருந்து தப்பினா். இதுகுறித்து சுதாகா் அளித்த புகாரின்பேரில் கோயம்பேடு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com