குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா். சென்னை உயா்நீதிமன்றத்தின் நுழைவு வாயில் முன்பு நடந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரத்தின் மனைவியும் மூத்த வழக்குரைஞருமான நளினி சிதம்பரம், மூத்த வழக்குரைஞா்கள் வைகை, சண்முகசுந்தரம், என்ஜிஆா்.பிரசாத், வழக்குரைஞா்கள் விஜயகுமாா், மில்டன், ஜிம்ராஜ், ஆா்.சுதா, கனகராஜ், பாா்த்தசாரதி, ஆரோக்கியதாஸ் உள்ளிட்ட ஏராளமான வழக்குரைஞா்களும், சட்டக் கல்லூரி மாணவா்களும் பங்கேற்றனா். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை காப்பது தொடா்பான வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகளைக் கையில் ஏந்தியவாறு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனா்.