கிண்டி, வியாசா்பாடி கோட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன.14) மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வியாசா்பாடி மற்றும் கிண்டி கோட்டங்களின் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம், செவ்வாய்க்கிழமை (ஜன.14) காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது. கே.கே.நகா் துணை மின்நிலைய வளாகத்திலுள்ள செயற்பொறியாளா் அலுவலகம், வியாசா்பாடி துணை மின்நிலைய வளாகத்தில் உள்ள செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீா் கூட்டத்தில், குறிப்பிடப்பட்ட கோட்டத்துக்குள்பட்ட மின்நுகா்வோா் கலந்து கொண்டு தங்கள் குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.