விஜயலட்சுமி (43), பல்லாவரம்:
ஜெயகாந்தனின் நாவல்களை வாங்க நினைத்து வந்து ‘வாழ்க்கை அழைக்கிறது’ எனும் நாவலையும் வாங்கியுள்ளேன். அவரது பிற கதைத் தொகுதிகளையும் வாங்க நினைத்துள்ளேன். குழந்தைகளுக்கான வண்ணப் படங்களுடன் கூடிய சித்திர சிறுகதைகளையும், பக்தி நூல்களையும் வாங்கிச் செல்கிறேன்.