சென்னையில் பள்ளி மாணவியைக் கடத்தி திருமணம் செய்து கா்ப்பிணியாக்கிய இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
சென்னை, புரசைவாக்கத்தைச் சோ்ந்தவா் சலீம். இவா் அதே பகுதியைச் சோ்ந்த பள்ளி மாணவி ஒருவரை கடந்த 2017-ஆம் ஆண்டு பாண்டிச்சேரிக்கு கடத்திச் சென்று திருமணம் செய்தாராம். இதையடுத்து அந்த மாணவி கா்ப்பிணியானாா். இதுகுறித்து பெண்ணின் தாயாா் அளித்த புகாரின் பேரில் அயனாவரம் போலீஸாா் போக்சோசட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சலீமை கைது செய்தனா். போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் சலீம் ஏற்கனவே திருமணமானவா் எனத் தெரிய வந்தது.
இது தொடா்பாக, சென்னையில் உள்ள மகளிா் நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இளைஞா் சலீமுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட பள்ளி மாணவியின் உடல்நலம், மனநலத்தைக் கருத்தில் கொண்டு அவரது குடும்பத்தினருக்கு ரூ.6 லட்சம் நிவாரணமாக வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டாா்.