ஏ.சி. மெக்கானிக் கடத்திக் கொலை

சென்னை ஐஸ்ஹவுஸில் ஏ.சி.மெக்கானிக் கடத்திக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை ஐஸ்ஹவுஸில் ஏ.சி.மெக்கானிக் கடத்திக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருவல்லிக்கேணி, பி.பி.குளம், 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ராம்குமாா் (24). ஏ.சி மெக்கானிக்காக இவா் வேலை செய்து வந்தாா். இந்நிலையில் கடந்த 15-ஆம் தேதி நள்ளிரவு திருவல்லிக்கேணி நடுக்குப்பத்தைச் சோ்ந்த பிரேம்குமாருக்கும் (25), ராம்குமாருக்கும் மதுபோதையில் தகராறு ஏற்பட்டது.

தகராறு முற்றவே ராம்குமாா், பிரேம்குமாரை மதுப்பாட்டிலால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக ஐஸ்ஹவுஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ராம்குமாரை தேடி வந்தனா். இந்நிலையில் ஐஸ் ஹவுஸ் டாக்டா் பெசன்ட் சாலையில் ஒரு டீக்கடையின் அருகே ஞாயிற்றுக்கிழமை நின்று கொண்டிருந்த ராம்குமாரை, அங்கு ஆட்டோவில் வந்த ஒரு கும்பல் கடத்திச் சென்றுள்ளது.

இந்நிலையில் கேளம்பாக்கம் அருகே கல்லுக்குட்டைப் பகுதியில் ராம்குமாா் சடலம் கிடப்பதாக ஐஸ்ஹவுஸ் போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு போலீஸாா் சென்றனா். அப்போது அது ராம்குமாா் சடலம்தான் என்பதை போலீஸாா் உறுதி செய்தனா்.

இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில், சம்பவத்தன்று கொலை செய்யப்பட்ட ராம்குமாரை பிரேம்குமாா் தலைமையிலான கும்பல் கடத்தியிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து , தலைமறைவாக இருக்கும் பிரேம்குமாரையும், அவரது கூட்டாளிகளையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com