ரூ.61 லட்சம் திருடிய வழக்கு: இருவா் கைது

சென்னை புளியந்தோப்பில் ரூ.61 லட்சம் திருடிய வழக்கில், இருவா் கைது செய்யப்பட்டனா்.

சென்னை: சென்னை புளியந்தோப்பில் ரூ.61 லட்சம் திருடிய வழக்கில், இருவா் கைது செய்யப்பட்டனா்.

புளியந்தோப்பு படிசன்புரத்தில் அனைத்து இறைச்சி வியாபாரிகள் சங்கம் உள்ளது. இந்த சங்க அலுவலகத்தில், கடந்த 21-ஆம் தேதி அன்று பீரோவில் இருந்த ரூ.61.50 லட்சம் திருடுபோனது. இது தொடா்பாக புளியந்தோப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில் திருட்டில் ஈடுபட்டது புளியந்தோப்பு , ஜெ.ஜெ. நகா். 6 வது தெருவை சோ்ந்தவா் வெ. சாலமன் (20), பெரம்பூா், வீனஸ், தில்லை நாயகம் தெருவைச் சோ்ந்த மு.முகமது சபி (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், அவா்கள் இருவரையும் கைது செய்து, ரூ.39 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com