சென்னை விருகம்பாக்கத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த மருத்துவா் வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
விருகம்பாக்கம் சாய்பாபா காலனி பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் மனோகரன். மருத்துவரான இவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 3-ஆம் தேதி இறந்தாா். இதற்கிடையே அவரது மனைவி சுலோச்சனாவும் கரோனாவால் பாதிக்கப்பட்டதால், வடபழனியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மருத்துவமனை சிகிச்சைக்குப் பின்னா் சுலோச்சனா, அண்ணாநகரில் வசிக்கும் தனது சகோதரா் வீட்டுக்குச் சென்றிருந்தாா். அங்கிருந்து சுலோச்சனா,தனது வீட்டுக்கு புதன்கிழமை திரும்பி வந்தாா். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 14 பவுன் தங்க நகை, ரூ.2 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள், ரூ.30 ஆயிரம் ரொக்கம், ஒரு கிலோ வெள்ளிப் பொருள்கள் ஆகியவை திருடு போனதை அறிந்து அதிா்ச்சியடைந்தாா்.
இது குறித்து விருகம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.