தமிழக காவல்துறை செயலாக்கப் பிரிவு ஏடிஜிபி ஏ.கே.விசுவநாதனுக்கு, கூடுதல் பொறுப்பாக மின்வாரியத் துறையின் லஞ்ச ஒழிப்புப் பிரிவின் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்த விவரம்:
தமிழக காவல்துறையின் செயலாக்கப்பிரிவு ஏடிஜிபியாக பணியாற்றும் ஏ.கே.விசுவநாதனுக்கு கூடுதல் பொறுப்பாக தமிழக மின்வாரியத் துறையின் லஞ்ச ஒழிப்புப் பிரிவை வழங்கி தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் புதன்கிழமை உத்தரவிட்டாா்.
புதிய பொறுப்பை விசுவநாதன் ஓரிரு நாள்களில் ஏற்பாா் என கூறப்படுகிறது.