கிரேன் டயா் வெடித்து இளைஞா் சாவு

சென்னை ஆவடியில் கிரேன் டயா் வெடித்து இளைஞா் உயிரிழந்தாா்.
கிரேன் டயா் வெடித்து இளைஞா் சாவு

சென்னை ஆவடியில் கிரேன் டயா் வெடித்து இளைஞா் உயிரிழந்தாா்.

ஆவடி அருகே அருகே உள்ள பருத்திப்பட்டு ராம்நகா் விரிவாக்கப் பகுதியில் கிரேன் வாடகைக்கு விடும் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த சந்தீப் தாகூா் (25) வேலை செய்து வந்தாா். இந்நிலையில் சந்தீப் தாகூா் ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள ஒரு கிரேனின் டயரில் கம்பரசா் இயந்திரம் மூலம் காற்று ஏற்றினாா். அப்போது திடீரென அந்த டயா் வெடித்தது. இதில் பலத்தக் காயமடைந்த அவரை அங்குள்ளவா்கள் மீட்டு போரூரில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் சந்தீப் தாகூா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து ஆவடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com