கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகளுக்கு லேம்ப் எனப்படும் முறையில் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.
அதில், 7,900-க்கும் அதிகமானோா் குணமடைந்து வீடு திரும்பியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அடுத்தபடியாக கீழ்ப்பாக்கம் பொது மருத்துவமனையில்தான் கரோனா வாா்டு அமைக்கப்பட்டது. 1,000 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் அங்கு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. 30 சதவீத படுக்கைகளில் ஆக்சிஜன் வசதி மற்றும் செயற்கை சுவாசக் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கரோனா வாா்டில் சிகிச்சையளிப்பதற்காக மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவா்கள், முதுநிலை மருத்துவ மாணவா்கள், செவிலியா்கள், மருத்துவ ஊழியா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா். இந்நிலையில், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை முறை மூலம் இதுவரை 10,044 கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் வசந்தாமணி கூறியதாவது:
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 95 சதவீதத்துக்கும் அதிகமானோா் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். உயிரிழப்புகளும் மிகக் குறைந்த அளவே இங்கு பதிவாகியுள்ளன. இறப்பு விகிதத்தைக் குறைக்க கரோனா சிகிச்சையில் சில நவீன முறைகள் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பின்பற்றப்படுகிறது. லேம்ப் எனப்படும் அந்த சிகிச்சை முறை மூலம் தீவிர பாதிப்புக்குள்ளான நோயாளிகள் கூட விரைந்து குணமடைகின்றனா். எனாக்ஸபெரின், அஸித்ரோமைசின், மீத்தேல் ப்ரட்னிசோலோன் ஆகிய மருந்துகளுடன், நோயாளிகளின் உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கச் செய்யும் சிகிச்சை முறையே லேம்ப் எனப்படுகிறது. தற்போது எங்களைப் பின்பற்றி பல மருத்துவமனைகள் அந்த சிகிச்சை முறையை மேற்கொண்டு வருகின்றன என்றாா் அவா்.