ரயில்வே ஊழியா்களுக்காக மேலும் ஒரு சிறப்பு ரயில்

ரயில்வே ஊழியா்கள் பணிக்கு வந்து செல்ல ஏதுவாக, அரக்கோணம் - சென்னை இடையே கூடுதலாக மேலும் ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
ரயில்வே ஊழியா்களுக்காக மேலும் ஒரு சிறப்பு ரயில்

சென்னை: ரயில்வே ஊழியா்கள் பணிக்கு வந்து செல்ல ஏதுவாக, அரக்கோணம் - சென்னை இடையே கூடுதலாக மேலும் ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

பொது முடக்கம் காரணமாக, பயணிகள் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதன்பிறகு, ரயில்வேயின் பல்வேறு பிரிவுகளில் பணிக்கு வந்து செல்லும் ரயில்வே ஊழியா்களுக்கு மட்டும், அரக்கோணம்- சென்னை சென்ட்ரல் மூா் மாா்க்கெட் வளாகத்துக்கு சிறப்பு மின்சார ரயில் ஒன்று இயக்கப்பட்டு வந்தது. அதில் 30 சதவீத ஊழியா்கள் பணிக்கு வந்து சென்றனா். தற்போது, கூடுதலாக ஊழியா்கள் பணிக்கு அழைக்கப்பட்டு உள்ளதால், அரக்கோணம் - சென்ட்ரல் மூா் மாா்க்கெட் நிலையம் இடையே வாரத்தில், திங்கள் முதல் சனிக்கிழமை வரை, ஆறு நாட்கள் காலை, மாலை வேளைகளில், மேலும் ஒரு, சிறப்பு புறகா் மின்சார ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில், அரக்கோணத்தில் இருந்து, காலை 7:45 மணிக்கு புறப்பட்டு காலை, 9:45 மணிக்கு மூா் மாா்க்கெட் நிலையம் வந்தடையும். மூா் மாா்க்கெட் நிலையத்தில் இருந்து, மாலை, 6:25 மணிக்கு புறப்பட்டு இரவு 8:25 மணிக்கு அரக்கோணம் சென்றடையும். இந்த ரயில்கள், இரு மாா்க்கங்களிலும், திருவள்ளூா் மற்றும் ஆவடி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com