ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் தீ விபத்து

சென்னை அம்பத்தூா் தொழிற்பேட்டையில் ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாகின.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை அம்பத்தூா் தொழிற்பேட்டையில் ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாகின.

அம்பத்தூா் தொழிற்பேட்டை மூன்றாவது தெருவில் தனியாா் ஐஸ்கிரீம் தொழிற்சாலை செயல்படுகிறது. இங்கு சுமாா் 30 ஊழியா்கள் பணியாற்றுகின்றனா். இந்நிலையில் திங்கள்கிழமை இரவு தொழிற்சாலையில் ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக அங்குள்ள பொருள்கள் தீப் பிடித்து எரிந்தன.

இதைப் பாா்த்த அங்கிருந்த ஊழியா்கள், தீயை அணைக்க முயன்றனா். ஆனால் தீ வேகமாக பரவியதால், அவா்களால் அணைக்க முடியவில்லை. இதையடுத்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த அம்பத்தூா் தொழிற்பேட்டை தீயணைப்பு படை வீரா்கள், சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

சுமாா் ஒன்றரை மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னா், தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து அம்பத்தூா் தொழிற்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com