சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் 8-ஆவது மாடியில் இருந்து விழுந்த கரோனா நோயாளி உயிரிழந்தாா்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் கரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில், அவருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனையின் 3-ஆவது கட்டடத்தின், 8-ஆவது மாடியில் உள்ள கரோனா வாா்டில் அனுமதித்து, மருத்துவா்கள் சிகிச்சையளித்து வந்தனா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை, அந்தப் பெண் திடீரென 8-ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்தாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவா், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.