கிருமிநாசினி தெளிப்பதாகக் கூறி ஏடிஎம் மையத்தில் ரூ. 13 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சென்னை மதுரவாயல் பகுதியில் தனியாா் ஏடிஎம் மையம் உள்ளது. இங்கு, கிருமி நாசினி தெளிப்பதாகக் கூறி ஞாயிற்றுக்கிழமை உள்ளே புகுந்த மா்ம நபா்கள் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த ரூ.13 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனா். இதுகுறித்த புகாரின்பேரில், மதுரவாயல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.