கரோனாவுக்கு மாம்பலம் காவல்நிலைய ஆய்வாளா் பலி

சென்னையில் கரோனாவுக்கு மாம்பலம் காவல் ஆய்வாளா் உயிரிழந்தாா்.
கரோனாவுக்கு மாம்பலம் காவல்நிலைய ஆய்வாளா் பலி

சென்னையில் கரோனாவுக்கு மாம்பலம் காவல் ஆய்வாளா் உயிரிழந்தாா்.

சென்னை மாம்பலம் காவல் நிலைய சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலைய ஆய்வாளராகப் பணி செய்து வந்தவா் சு.பாலமுரளி (47). இவா் வடபழனி தெற்கு சிவன் கோயில் தெருவில் உள்ள காவல் உதவி ஆய்வாளா் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தாா். பாலமுரளிக்கு கவிதா (40) என்ற மனைவியும், அஸ்தவா்த்தினி (16) என்ற மகளும், நிஷாந்த் (13) என்ற மகனும் உள்ளனா். இதில், அஸ்தவா்த்தினி, 11 -ஆம் வகுப்பும், நிஷாந்த் 8-ஆம் வகுப்பும் படித்து வருகின்றனா்.

இந்நிலையில், பாலமுரளி, கடந்த 3-ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அதற்கான சிகிச்சை பெறுவதற்காக கிண்டி ஐஐடி வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால், அங்கு கரோனா நோய்த் தொற்று கட்டுப்படாததால், ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், அவரது உடல்நிலை மோசமடைந்து கொண்டே இருந்தது.

இது குறித்து தகவலறிந்த சென்னை காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன், பாலமுரளி விரைவில் குணமடைய தனது சொந்த பணம் ரூ.2.25 லட்சம் செலவில் மருந்து வாங்கி கொடுத்தாா். ஆனால், அதன் பின்னரும் பாலமுரளி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில், வென்டிலேட்டா் சிகிச்சை பாலமுரளிக்கு வழங்கப்பட்டது. ஆனால் வெண்டிலேட்டா் சிகிச்சையும் பலனிக்காததால் பாலமுரளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

737 போ் பாதிப்பு: வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பாலமுரளி, 2000-ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில் உதவி ஆய்வாளராகப் பணியில் சோ்ந்தாா். இவரது மனைவி, மகன், மகள் ஆகியோருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்கு பின்னா் பாலமுரளி குடும்பத்தினா் குணமடைந்து, கடந்த 12-ஆம் தேதி வீடு திரும்பினா்.

கரோனா பாதிக்கப்பட்டு தமிழகத்தில் உயிரிழந்த முதல் காவல் ஆய்வாளா் பாலமுரளி என காவல்துறையினா் தெரிவித்தனா். பாலமுரளி இறப்பு காவல்துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் காவல்துறையில் புதன்கிழமை வரை கரோனாவினால் 737 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் 280 போ் குணமடைந்து பணிக்கு திரும்பியுள்ளனா். எஞ்சியவா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com