கார்த்திகேயன் மெட்ரிக் மற்றும் வடபழனி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளின் ஆண்டுவிழா கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
கார்த்திகேயன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் வடபழனி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளின் 55-வது ஆண்டு விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் திருமுருகன், பள்ளி மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கை குறித்து பேசினார்.
மேலும், பள்ளி தாளாளர் கோமதிக்கு இவர் கல்வித்தாய் என பட்டம்சூட்டி கௌரவித்தார்.
இதையடுத்து, பள்ளியில் சிறந்து விளங்கிய திறமை மிகுந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் தலைவர் சேதுரத்னம், துணைத் தலைவர் ஜீவலதா, இயக்குநர் எம்.ஏ. செல்வராஜ் மற்றும் பள்ளி முதல்வர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுமார் 800-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர்.
ஆண்டு விழாவின் கலை நிகழ்ச்சிகள் பெற்றோர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.