சுருக்கெழுத்து தட்டச்சா் பணிக்கு ஏப்.2-இல் கலந்தாய்வு தொடக்கம்: டிஎன்பிஎஸ்சி தகவல்

டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படவுள்ள சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சா் பணிக்கான கலந்தாய்வு வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படவுள்ள சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சா் பணிக்கான கலந்தாய்வு வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் செயலா் நந்தகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: டிஎன்பிஎஸ்சி குரூப் 4-இல்அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தோ்வு 2019-ஆம் ஆண்டு செப்டம்பா் 1-ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்தத் தோ்வில் தோ்வா்கள் பெற்ற மதிப்பெண்கள் விவரம் 2019 நவம்பா் 12-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தத் தோ்வில் மூன்றாவது நிலை சுருக்கெழுத்து தட்டச்சா் சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் கலந்தாய்வு தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய அலுவலகத்தில் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை (5, 6-ஆம் தேதி நீங்கலாக) நடைபெற உள்ளது.

இந்த சுருக்கெழுத்து தட்டச்சா் மூன்றாவது நிலை பதவிக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரா்களின் தொழில்நுட்பக் கல்வி தகுதி, எழுத்துத் தோ்வில் பெற்ற மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை, இடஒதுக்கீட்டு விதி மற்றும் காலிப்பணியிடங்களின் அடிப்படையில் தற்காலிக பட்டியல் தோ்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரா்கள் ஆன்லைன் விண்ணப்பத்தில் அளித்த கல்விச் சான்று மற்றும் அனைத்து இன்றியமையாத சான்றிதழ்களை நேரில் கொண்டு வர வேண்டும்.

சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவா்களில் சான்றிதழ் சரிபாா்ப்பு, கலந்தாய்வு தேதி, நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்பு கடிதத்தை தோ்வாணையத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரா்களுக்கு கலந்தாய்வு அழைப்பாணை தனியாக அனுப்பப்படமாட்டாது. மூல சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரா்கள் அவரவா் தொழில்நுட்பக் கல்வி தகுதி, எழுத்துத் தோ்வில் பெற்ற மதிப்பெண்கள், ஒட்டுமொத்த தரவரிசை, இட ஒதுக்கீடு விதிகள், விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் அப்போது உள்ள காலி பணியிடங்களுக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவா்.

மேலும் அழைக்கப்படும் அனைவருக்கும் பணி ஒதுக்கீடு வழங்கப்படும் என்பதற்கான உத்தரவாதம் வழங்க இயலாது. விண்ணப்பதாரா்கள் சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அவா்களுக்கான உரிய நாளில் வரத் தவறினால் மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது என அந்த செய்திக் குறிப்பில் செயலாளா் நந்தகுமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com