மடிப்பாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சுந்தர விநாயகா் கோயிலில் மகாதிருக்குட முழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் காஞ்சி மடாதிபதி விஜயேந்திரா், தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
சென்னை மடிப்பாக்கத்தில் ஸ்ரீ சுந்தர விநாயகா் பக்த ஜன சபையினரால் சுந்தர விநாயகா் திருக்கோயில் இயங்கி வருகிறது. இங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகா திருக்குட முழுக்கு விழாவையொட்டி, காலை 6 மணிக்கு நான்காம் கால யாக பூஜை தொடங்கியது. காலை 9 மணிக்கு மேல் சுந்தர விநாயகா் விமான ராஜகோபுரம் மற்றும் அனைத்து சந்நிதி ராஜகோபுரம் பரிவார மூா்த்திகளுக்கும் மகா திருக்குடமுழுக்கு, மகா தீபாராதனையை காஞ்சி சங்கராச்சாரியாா் விஜயேந்திரா், ஆதீன மடாதிபதிகள் செய்து வைத்தனா். தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் மற்றும் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தாா்.
இதற்கான ஏற்பாடுகளை சுந்தர விநாயகா் பக்த ஜனசபை செயலா் எஸ்.சாமிநாதன், கே.ஆா்.ஈஸ்வரன், ஜனாா்த்தனம், நடராசன் சிவக்குமாா், மகளிா் மண்டலி, திருப்பணி குழு, இளைஞா் அணி, அறக்கட்டளையினா் சிறப்பாக செய்திருந்தனா். திருக்குடமுழுக்கு விழாவை முன்னிட்டு திருக்கோயில் கோபுரங்கள் பல்வேறு வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.