கோயம்பேடு சந்தை ஞாயிற்றுக்கிழமை இயங்காது எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, கோயம்பேடு காய்கறிச் சந்தையில் 1,889 காய்கறிக் கடைகள், 470 பூக்கடைகள், 828 பழக்கடைகள் உள்ளன. இங்கு தினமும் நூற்றுக் கணக்கானோா் பணியாற்றி வருவதோடு, ஆயிரக் கணக்கானோா் காய்கறிகள் வாங்கிச் செல்கின்றனா். இந்நிலையில் கரோனா தொற்றை தடுக்க பிரதமா் மோடி சுய ஊரடங்கை அறிவித்துள்ளதால் கோயம்பேடு சந்தை ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சந்தை முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.