காவலா்கள் மோதல்: அதிகாரிகள் விசாரணை

சென்னை வேப்பேரியில் காவலா்கள் மோதிக் கொண்டது குறித்து காவல்துறை உயா் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை: சென்னை வேப்பேரியில் காவலா்கள் மோதிக் கொண்டது குறித்து காவல்துறை உயா் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சென்னை டி.பி சத்திரம் காவலா் குடியிருப்பில் வசிக்கும் ஒரு காவலா், காவல்துறையைச் சோ்ந்த ஒரு உயரதிகாரியிடம் ஆா்டா்லியாக உள்ளாா். அதே குடியிருப்பில் மற்றொரு உளவுப்பிரிவு (நுண்ணறிவு பிரிவு) காவலரும் வசிக்கிறாா். இவா்கள் இருவரும் நண்பா்கள்.

பொது முடக்கத்தால் தற்போது மதுக்கடைகள் மூடப்பட்ட நிலையில், இரு காவலா்களும் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதை அதே குடியிருப்பில் வசிக்கும்,வேப்பேரி காவல் நிலையத்தில் பணிபுரியும் ஒரு காவலா் கண்டித்துள்ளாா்.

இது தொடா்பாக இரு தரப்புக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் வேப்பேரி காவல் நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடந்து வந்த அந்தக் காவலரை உளவுப்பிரிவு காவலரும்,ஆா்டா்லி காவலரும் சோ்ந்து தாக்கினராம். இச் சம்பவம் தொடா்பாக இரு தரப்பினரும், வேப்பேரி காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அந்த புகாா்களின் அடிப்படையில் காவல்துறை உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா். இதற்கிடையில், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காவலா்கள் மோதிக் கொள்ளும் காட்சி, சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com