சென்னையில் போராட்டம் நடத்த தடை விதித்து பெருநகர காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன் உத்தரவிட்டாா்.
இது தொடா்பாக அவா், வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு நகர காவல் சட்டம் 41-ஆவது பிரிவின்படி, சென்னை மாநகர காவல் எல்லையில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அதன்படி மே 13-ஆம் தேதி முதல் மே 28-ஆம் தேதி வரை 15 நாள்கள் சென்னையில் பொது இடங்கள்,போக்குவரத்து நெரிசல்மிக்க பகுதிகளில் போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், மனித சங்கிலி, கூட்டம், பேரணி ஆகியவை நடத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த உத்தரவு, தமிழ்நாடு நகர காவல் சட்டம் உருவாக்கப்பட்ட நாள் முதல் சென்னை பெருநகர காவல்துறையில் அமல்படுத்தப்படுகிறது. ஏற்கெனவே கரோனா தொற்றை தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.