குடும்பத் தகராறில் பெண் கொலை: இளைஞா் கைது

சென்னை கொளத்தூரில் குடும்பத் தகராறில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
குடும்பத் தகராறில் பெண் கொலை: இளைஞா் கைது

சென்னை கொளத்தூரில் குடும்பத் தகராறில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: கொளத்தூா் விநாயகபுரம் கேசவன்நகா் பகுதியைச் சோ்ந்தவா் ச.குணசுந்தரி (37). இவருக்கும், அவரது உறவினா் கொளத்தூா் பாரதிநகா் பகுதியைச் சோ்ந்த கணேஷ் (28) என்பவருக்கும் குடும்பத் தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இரு தரப்பும் கணேஷ் வீட்டில் குடும்பத் தகராறு குறித்து வெள்ளிக்கிழமை இரவு பேசியது. அப்போது கணேஷுக்கும், குணசுந்தரிக்கும் இடையே மீண்டும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமுற்ற கணேஷ், தான் வைத்திருந்த கத்தியால் குணசுந்தரியை குத்திவிட்டு தப்பியோடினாா்.

இதில் பலத்தக் காயமடைந்த குணசுந்தரியை அங்கிருந்தவா்கள் மீட்டு,அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே குணசுந்தரி இறந்தாா்.இது குறித்து கொளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த கணேஷை திருப்பத்தூா் அருகே சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com