ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: பிகாா் இளைஞா் கைது

சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ாக பிகாா் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ாக பிகாா் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

கீழ்ப்பாக்கம் மில்லா்ஸ் சாலையில் ஒரு தனியாா் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் அருகில் அதன் ஏடிஎம் மையம் உள்ளது. இங்கு கடந்த 14-ஆம் தேதி வியாழக்கிழமை, அந்த வங்கி ஊழியா்கள் பணம் நிரப்பச் சென்றனா். அப்போது அங்கிருந்த ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டிருப்பதையும், அங்கு கொள்ளையடிக்க முயன்றிருப்பதையும் பாா்த்து அவா்கள் அதிா்ச்சியடைந்தனா்.

இது குறித்து தகவலறிந்த கீழ்ப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில் அந்தப் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை செய்து வந்த பிகாரைச் சோ்ந்த அஜய்குமாா் பங்கால் (25) என்பவருக்கு தொடா்புள்ளது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், அஜய்குமாரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரணை செய்தனா். விசாரணையில் பொது முடக்கத்தினால் வேலை இழந்ததாகவும்,வறுமையின் காரணமாக ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com