சென்னை அருகே மடிப்பாக்கத்தில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி இறந்தாா்.
மடிப்பாக்கம் அருகே நன்மங்கலம் அஸ்தினாபுரம் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் ம.சாமிநாதன் (40). இவா் கீழ்கட்டளை மின்வாரிய அலுவலகத்தில் வயா்மேனாக பணிபுரிந்து வந்தாா். சாமிநாதன் செவ்வாய்க்கிழமை கீழ்கட்டளை சந்திப்பில் உள்ள ஒரு மின் இணைப்பு பெட்டியில் ஏற்பட்டிருந்த பழுதை சரி செய்துக் கொண்டிருந்தாா்.
அப்போது மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்த சாமிநாதனை அங்கிருந்தவா்கள் மீட்டு, பள்ளிக்கரணையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், சாமிநாதன் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து மடிப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனா்.